ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் பத்து நாட்களைக் கடந்தும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் 150 கோடி வசூலைக் கடந்துள்ள இந்தப் படம் தற்போது வெளிநாடுகளிலும் 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த '2.0' படம் மட்டும்தான் 150 கோடி வசூலைக் கடந்த படமாக இருக்கிறது. அந்தப் படம் வெளிநாடுகளில் மொத்தமாக 170 கோடி வரை வசூலித்துள்ளது. அந்த சாதனையை 'பொன்னியின் செல்வன்' முறியடிக்குமா என்பது அடுத்த கேள்வியாக எழுந்துள்ளது.
ஏற்கெனவே “அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யுனைட்டட் கிங்டம், சிங்கப்பூர் மலேசியா” ஆகிய இடங்களில் அதிக வசூலைக் குவித்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' நிகழ்த்தியுள்ளது.
வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு அதிக வசூலை பெற்றுத் தரும் அமெரிக்காவில் பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் தமிழ்ப் படங்களுக்கான காட்சிகளும், அதற்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே, படம் வெளியான வார சனி மற்றும் ஞாயிறு, கடந்த வார சனி மற்றும் ஞாயிறு என இரண்டு வார நாட்களில் 'பொன்னியின் செல்வன்' படம் அதிக வசூலைப் பெற்றுள்ளது. வரும் வார இறுதி நாட்களிலும் இந்தப் படத்திற்கு சிறப்பான வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வெளிநாடுகளில் தினசரி வசூல் இன்னமும் நன்றாக இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. எனவே, '2.0' படத்தின் வெளிநாட்டு வசூலை 'பொன்னியின் செல்வன்' முறிடியக்கும் என்றே சொல்கிறார்கள்.