Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் இருந்து விலகி இசை தனி துறையாக வளரவேண்டும்: கமல்ஹாசன்

10 அக், 2022 - 11:08 IST
எழுத்தின் அளவு:
Music-should-grow-as-a-separate-industry-away-from-cinema:-Kamal-Haasan

பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் தற்போது தனி இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ம லையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அவர் வெளியிடும் இசை ஆல்பம் 'ஓ பெண்ணே...' இதன் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.

வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தேவி ஸ்ரீ பிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார், அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதமாவதை எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்.

திரை இசை பாடல்களை தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும், இசை கலைஞர்கள் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு தான், இளையராஜாவே ஆனாலும் அவர் படத்தின் கதைக்குள்தான் இசை அமைத்தாக வேண்டும். சுயாதீன பாடல்கள் தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும். இது தனித் துறையாக வளர வேண்டும்.

மற்ற நாடுகளில் திரை பிரபலங்களை விட சுயாதீன கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள் நடிகர்களை விட அவர்கள் பாப்புலராக இருக்கிறார்கள். தனி விமானங்களில் பயணிக்கிற அளவிற்கு வசதியானவர்களாக இருக்கிறார்கள்.. திரைப்படங்களை விட மிகபெரிய துறையாக இசை துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அம்மா, அப்பா ஆகிவிட்டோம் : இரட்டை ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்அம்மா, அப்பா ஆகிவிட்டோம் : இரட்டை ஆண் ... தமிழில் வெளியாகும் காந்தாரா தமிழில் வெளியாகும் காந்தாரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)