மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் தற்போது தனி இசை ஆல்பங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ம லையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அவர் வெளியிடும் இசை ஆல்பம் 'ஓ பெண்ணே...' இதன் தமிழ் பதிப்பை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.
வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தேவி ஸ்ரீ பிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். பல சாதனைகள் படைத்து அடுத்து அடுத்து என உத்வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறார், அது சிறந்த இசை கலைஞர்களுக்கே உண்டான சிறப்பம்சம். இவருக்கு வெற்றி கண்டிப்பாக வந்தே தீர வேண்டும், இவருக்கு வெற்றி தாமதமாவதை எண்ணி நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்.
திரை இசை பாடல்களை தாண்டி, சுயாதீன பாடல்கள் நிறைய வர வேண்டும், இசை கலைஞர்கள் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு தான், இளையராஜாவே ஆனாலும் அவர் படத்தின் கதைக்குள்தான் இசை அமைத்தாக வேண்டும். சுயாதீன பாடல்கள் தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும். இது தனித் துறையாக வளர வேண்டும்.
மற்ற நாடுகளில் திரை பிரபலங்களை விட சுயாதீன கலைஞர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள் நடிகர்களை விட அவர்கள் பாப்புலராக இருக்கிறார்கள். தனி விமானங்களில் பயணிக்கிற அளவிற்கு வசதியானவர்களாக இருக்கிறார்கள்.. திரைப்படங்களை விட மிகபெரிய துறையாக இசை துறை வளர வேண்டும், அதற்கு உண்டான தகுதி அதில் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.