எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தெலுங்கில் காட்பாதர் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நயன்தாரா. அந்த அறிக்கையில், 'காட்பாதர் ஒரு மிகச்சிறந்த படம். சிரஞ்சீவி உடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அவர் ஒரு வைரம் போன்றவர். எப்போதுமே உற்சாகமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது ஒவ்வொரு நொடியும் அருமையான நினைவாக அமைந்தது. அதோடு அனைவரும் ரசிக்கும் நடிகரான சல்மான்கான் இந்த படத்தில் நடித்ததால் இப்படம் மேலும் வலு பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய நன்றி.
சத்ய தேவ், தான்யா போன்றவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் தமன், கேமராமேன் நீரவ் ஷா ஆகியோர் தங்களது திறமையால் இந்த படத்தை வெற்றி பெற செய்துள்ளார்கள். ஆர்.பி.சவுத்ரி மற்றும் பிரசாத் ஆகியோர் இந்த படத்தை பிரமாண்டமாக விளம்பரம் செய்து வெற்றி பெற வைத்துள்ளார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் அனைவருக்கும் நன்றி. காட்பாதர் படத்தை சூப்பர் ஹிட் படமாக்கிய ரசிகர்களுக்கும் எனது நன்றி என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார் நயன்தாரா.