கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு மீண்டும் சினிமாவில் படங்கள் இயக்க போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு அவ்வப்போது தான் சைக்கிளிங், ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருபவர், சில பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .