தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இன்றைய சினிமா உலகில் தான் போகும் இடமெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்திருக்க வேண்டுமென சில நடிகர்கள் என்னென்னமோ செய்கிறார்கள். இசை வெளியீடு விழாக்கள் நடந்தால் அரசியல் கட்சிகள் போல பணம் கொடுத்து கூட ஆட்களைக் கூட்டி வந்து கத்த வைக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு மத்தியில் மாறுபட்ட நடிகராக இருப்பவர் அஜித். அதற்காகவே பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை துணிச்சலாகக் கலைத்தவர்.
திருப்பதியில் இன்று அதிகாலை சுப்ரபாத தரிசனம் செய்தார் அஜித். அவர் வந்த போது அருகில் வரிசையில் நின்றிருந்த சிலர் 'தல தல' என்று கூச்சலிட்டார்கள். ஆனால், அப்படி செய்யக் கூடாது, இது கோயில் என்று சைகை செய்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார். அதேபோல், காது கேளாத நபர் ஒருவர் செல்பி கேட்க, அவரின் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார் அஜித். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த வாரம் பாலக்காடு அருகே தனது குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார் அஜித். அடுத்து திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அஜித்தின் இந்த பக்தி வழிபாடு சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.