டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

இன்றைய சினிமா உலகில் தான் போகும் இடமெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்திருக்க வேண்டுமென சில நடிகர்கள் என்னென்னமோ செய்கிறார்கள். இசை வெளியீடு விழாக்கள் நடந்தால் அரசியல் கட்சிகள் போல பணம் கொடுத்து கூட ஆட்களைக் கூட்டி வந்து கத்த வைக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு மத்தியில் மாறுபட்ட நடிகராக இருப்பவர் அஜித். அதற்காகவே பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை துணிச்சலாகக் கலைத்தவர்.
திருப்பதியில் இன்று அதிகாலை சுப்ரபாத தரிசனம் செய்தார் அஜித். அவர் வந்த போது அருகில் வரிசையில் நின்றிருந்த சிலர் 'தல தல' என்று கூச்சலிட்டார்கள். ஆனால், அப்படி செய்யக் கூடாது, இது கோயில் என்று சைகை செய்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார். அதேபோல், காது கேளாத நபர் ஒருவர் செல்பி கேட்க, அவரின் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார் அஜித். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த வாரம் பாலக்காடு அருகே தனது குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார் அஜித். அடுத்து திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அஜித்தின் இந்த பக்தி வழிபாடு சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.