Advertisement

சிறப்புச்செய்திகள்

லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர்

01 நவ, 2025 - 04:57 IST
எழுத்தின் அளவு:
Fan-pays-tribute-to-Mammootty-at-Kannur-temple

நடிகர் மம்முட்டி 70 வயதிலும் இளைஞனை போல சுறுசுறுப்பாக வருடத்திற்கு 5 படங்களுக்கு குறையாமல் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கு சிறு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தன்னுடைய படங்களின் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டுவிட்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார் மம்முட்டி.

அந்த சமயத்தில் நடிகர் மோகன்லால் சபரிமலை சென்றபோது மம்முட்டி குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது கூட பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் பூரண குணம் அடைந்துள்ள மம்முட்டி தான் நடித்து வந்த பேட்ரியாட் படத்தின் விசாகப்பட்டினம் மற்றும் லண்டன் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்தவர், எட்டு மாதத்திற்கு பிறகு சமீபத்தில் கேரளா திரும்பி உள்ளார்.

மம்முட்டி குணமடைந்ததை தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனை செய்திருந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்கிற ரசிகர் கண்ணூர் தளிபரம்பாவில் உள்ள பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரா கோவிலில் பொன் குடம் வழிபாடு என்கிற நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். அதாவது தங்கத்தை குடத்தில் வைத்து கோவிலுக்கு காணிக்கையாக கொடுப்பது என்பது தான் பொன்னின் குடம் வழிபாடு என்று அழைக்கப்படுகிறது. கோவில் நிர்வாகிகள் அவரது நேர்த்திக் கடனை ஏற்றுக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டிஎட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய ... கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in