டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அந்த காலத்தில் ஒலிச்சித்ரம் ரொம்பே பேமஸ், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், மதுரை வீரன், நாடோடி மன்னன் படங்களின் ஒலிசித்திரங்கள் மிகவும் பிரபலம். இதனை வானொலிகள் ஒளிபரப்பும். அதேபோல ரேடியோ நாடகங்களும் அந்த காலத்தில் புகழ்பெற்றவை. அது மாதிரியான ஒன்றுதான் நாவல்களை ஆடியோ நாடகங்களாக தயாரித்து வெளியிடுவது. இந்த துறையில் டிசி என்ற நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.
இந்த நிறுவனம் வெளியிடும் பிரத்யேகமாக ஆடியோ நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் இந்த நாடகத்தின் 3வது பாகம் இந்தியாவில் வெளியாக உள்ளது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். அதாவது குரல் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருப்பதாவது: இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.




