திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சாருஹாசன் கதை நாயகனாக நடித்த 'தாதா87' படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ இயக்கி வரும் படம் பவுடர். இதில் நிகில் முருகன், வித்யா பிரதீப், அனித்ரா நாயர், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் விஜய்ஸ்ரீயும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
படம் பற்றி விஜய்ஸ்ரீ கூறியதாவது: அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவுடர் போடுவதில் நிஜ முகங்கள் தொலைகிறது.
ஒரு இரவில் நடக்கும் இந்த கதை. நமது வாழ்க்கையில் தினம்தோறும் நாம் கடந்து சென்ற நினைவுகளை ஞாபகப்படுத்தும். அதே போல ஒரு உயர் அதிகாரி தனக்கு கீழே பணிபுரிபவர்களை சரிசமமாக கருத வேண்டும் என்கிற கருத்தையும் பதிவு செய்யும். ஒரு மேக்அப் மேன், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு தந்தை மகள் இந்த நால்வரும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பில் என்ன ஆகிறது, என்ன தீர்வு கிடைக்கிறது என்பதை சுவாரசியமாக சொல்லும் படம் தான் பவுடர். இந்த விஷயங்கள் முதல் பாகமாக உருவாகி உள்ளது. இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கும். என்றார்.