பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. 1930-40 காலக்கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தில் உருவாகிறது. இதற்காக நீண்ட தலைமுடி, தாடி என உலா வருகிறார் தனுஷ். இது தொடர்பான போட்டோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இருதினங்களுக்கு முன் மாநகரம் பட புகழ் சந்தீப் கிஷான் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாயகியாக பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார். தமிழில் டாக்டர் படத்தில் அறிமுகமாகி எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் நடித்தார் பிரியங்கா. அடுத்து தனுஷ் உடன் நடிக்கிறார்.
இதுபற்றி பிரியங்கா கூறுகையில், ‛‛இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் தனுஷ் உடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. படப்பிடிப்பு துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்'' என்கிறார்.