ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படம் நல்ல வசூல் கொடுத்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக இரண்டாவது பாகம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் கவும் மேனன். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசனும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்ற போது, வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டது. இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கி விட்டதாகவும், அந்த பணிகள் முடிவடைந்ததும் படப்பிடிப்பை தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. மேலும், வெந்து தணிந்தது காடு திரைக்கு வந்து நான்கு நாட்களில் 50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.