மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படம் நல்ல வசூல் கொடுத்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக இரண்டாவது பாகம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார் கவும் மேனன். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசனும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்ற போது, வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டது. இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இறங்கி விட்டதாகவும், அந்த பணிகள் முடிவடைந்ததும் படப்பிடிப்பை தொடங்க தயாராக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அதனால் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. மேலும், வெந்து தணிந்தது காடு திரைக்கு வந்து நான்கு நாட்களில் 50 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.