மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். 7 ஆண்டுகளுக்கு பிறகு மலேஷியாவின் கோலாலம்பூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். டிஎம்ஒய் கிரியேசன் என்ற நிறுவனம் மூலம் இந்த நிகழ்ச்சி வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28ம் தேதி நடக்க உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் 10000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து வெளியிட்டனர். இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை. எனவே இந்த சாதனை 'மலேஷியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்' அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.