என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
அன்பு மகன் மனோஜ் திடீர் மறைவால் மனம் உடைந்து போய்விட்டார் இயக்குனர் பாரதிராஜா. கடந்த பல வாரங்களாக அவரை சினிமா நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை. அவரையும் சினிமாகாரர்கள் சந்தித்ததாக தெரியவில்லை. இசையமைப்பாளர் இளையராஜா அவரை சந்தித்து துக்கம் கேட்டார். பின்னர், அவர் யாரையும் சந்திக்கவில்லை.
பாரதிராஜா எப்படி இருக்கிறார் என்று விசாரித்து பார்த்தால், 'கடந்த 2 மாதங்களாக அவர் சென்னையில் இல்லை. மன ஆறுதலுக்காக மலேசியா கோலம்பூரில் உள்ள மகள் ஜனனி வீட்டில் இருக்கிறார். அங்கே ஓய்வெடுத்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் அவர் நடித்த 'தொடரும்' படம் பெரிய ஹிட். ஆனாலும், மனம், உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்போதைக்கு அவருக்கு தேவை அமைதியான மனநிலை என்பதால் குடும்பத்தினர் இந்த முடிவெடுத்து உள்ளனர். எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை' என்கிறார்கள்.