என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
பாரம்பரிய, அரிய வகை நெல்களை பாதுகாத்து வைத்தவர் நெல் ஜெயராமன். 169 நெல் ரகங்களை மீட்டெடுத்தவர். விவசாயிகள் மத்தியில் அவருக்கு அப்படியொரு நல்ல பெயர். புற்று நோய் பாதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி 2018ல் காலமானார். அப்போதே அவரை ஆஸ்பத்திரியில் வந்து நலம் விசாரித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் மகன் படிப்பு செலவை ஏற்பதாகவும் வாக்கு கொடுத்து இருக்கிறார். கடந்த 7 ஆண்டுகளாக நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை கவனித்தவர், இந்த ஆண்டு அவரை கல்லுாரியில் சேர்த்து இருக்கிறார்.
இது குறித்து முகநுாலில் பதிவிட்டுள்ள நந்தன் பட இயக்குனர் சரவணன், 'பலர் இப்படி வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால், மறந்துவிடுவார்கள். சிவகார்த்திகேயன் 7 ஆண்டுகளாக நெல் ஜெயராமன் மகன் கல்விக்கு உதவி செய்கிறார். தவிர, படிப்பு, பரீட்சை குறித்து அவ்வப்போது அவரிடம் ஆர்வமாக கேட்டு அறிகிறார்'' என்று பதிவிட்டுள்ளார். இதுவரை தான் யாருக்கும் உதவிகள் செய்வதாக சிவகார்த்திகேயன் சொன்னது இல்லை. கல்வி, உதவிகள் விஷயத்தில் பப்ளிசிட்டி தேடியதில்லை.