‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இசைத் துறையில் உள்ள பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் மாறிக் கொண்டிருந்த நேரத்தில் பாடகர் மலேசிய வாசுதேவனும் இயக்குனர் ஆனார். அவர் இயக்கிய ஒரே படம் 'நீ சிரித்தால் தீபாவளி'.
இந்த படத்தில் சிவகுமார், ஹரிஷ் குமார், டெய்சி சோனியா, நிழல்கள் ரவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.
படத்தில் அம்பிகாபதி, அமராவதி ரேன்ஞ்சுக்கு ஒரு காதல் கதை சொன்னார் வாசுதேவன், ஆனால் படம் தோல்வி அடைந்தது. உருக உருக சொன்ன காதலும், அளவிற்கு அதிகமான பாடல்களும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள். இந்த படத்தின் தோல்வியால் இதன்பிறகு மலேசியா வாசுதேவன் படங்கள் எதையும் இயக்கவில்லை.