‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாகாணங்கள் பிரிந்தது. அந்தந்த மாநிலங்கள் தங்கள் மொழி திரைப்படங்களுக்கு தனி முக்கியத்தும் கொடுத்தது. தனித்தனியாக அரசு விருதுகளும் அறிவித்தது. அந்த வகையில் 1949ம் ஆண்டு தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விருது அறிவிப்புக்கு பிறகு 1949ம் ஆண்டுக்கான முதல் சிறந்த திரைப்படத்திற்காக விருதை 'நவ ஜீவனம்' பெற்றது. இந்த படத்தை நடிகை கண்ணாம்பா தனது கணவருடன் இணைந்து தயாரித்திருந்தார். அவரே நாயகியாக நடித்தார். வி.நாகையா, ஸ்ரீராம், டி.ஆர்.ராமச்சந்திரன், டி.ஏ.ஜெயலட்சுமி, எஸ்.வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார், கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம் இயக்கி இருந்தார்.
எளிய தொழிலாளி நாகையாவும், அவருடைய மனைவி கண்ணாம்பாவும், பெற்றோரை இழந்த தன் தம்பி ஸ்ரீராமை சிறுவனாக இருக்கும்போதிலிருந்து வளர்க்கிறார்கள். வளர்ந்து கல்லூரிக்கு செல்லும் ஸ்ரீராம் உடன் பயிலும் மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார்.
வரலட்சுமி மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் நமக்கு வேண்டாம் என்று அண்ணனும் அண்ணியும் ஸ்ரீராமை எச்சரிக்கிறார்கள். ஆனால், அவர்களின் சொல் கேளாமல் வரலட்சுமியைத் திருமணம் செய்து கொள்கிறார். மாமனாரின் மரணத்துக்குப் பின் ஸ்ரீராம் முதலாளி ஆகிறார். அதன் பிறகு ஸ்ரீராமின் வாழ்க்கை மாறுகிறது. அதை எப்படி அண்ணனும், அண்ணியும் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.