பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
அக்மார்க் தமிழ் பெண்ணான சாய்பல்லவி நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். பிரேமம் படத்தின் மலர் டீச்சர் அவருக்கு மலையாள சினிமாவில் பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தமிழில் சில படங்களில் நடித்தாலும் அது அவருக்கு சரியாக அமையவில்லை. கடைசியாக வெளிவந்த கார்கி படம்தான் தமிழில் அவருக்கு கைகொடுத்த படம்.
ஆனால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக அங்கு டாப்பில் இருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞரான சாய்பல்லவி டாக்டரும் ஆவார். தற்போது அவர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறர்.
இந்த நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் சாய்பல்லவி. சிகப்பு நிற புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூ அணிந்து அவர் கோவிலை வலம் வந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். “பிரகதீஸ்வரரின் அருள் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும்” என்று நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.