தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

அக்மார்க் தமிழ் பெண்ணான சாய்பல்லவி நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். பிரேமம் படத்தின் மலர் டீச்சர் அவருக்கு மலையாள சினிமாவில் பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தமிழில் சில படங்களில் நடித்தாலும் அது அவருக்கு சரியாக அமையவில்லை. கடைசியாக வெளிவந்த கார்கி படம்தான் தமிழில் அவருக்கு கைகொடுத்த படம்.
ஆனால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக அங்கு டாப்பில் இருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞரான சாய்பல்லவி டாக்டரும் ஆவார். தற்போது அவர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறர்.
இந்த நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் சாய்பல்லவி. சிகப்பு நிற புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூ அணிந்து அவர் கோவிலை வலம் வந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். “பிரகதீஸ்வரரின் அருள் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும்” என்று நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.