இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அக்மார்க் தமிழ் பெண்ணான சாய்பல்லவி நடிகையாக அறிமுகமானது மலையாளத்தில். பிரேமம் படத்தின் மலர் டீச்சர் அவருக்கு மலையாள சினிமாவில் பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தமிழில் சில படங்களில் நடித்தாலும் அது அவருக்கு சரியாக அமையவில்லை. கடைசியாக வெளிவந்த கார்கி படம்தான் தமிழில் அவருக்கு கைகொடுத்த படம்.
ஆனால் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக அங்கு டாப்பில் இருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞரான சாய்பல்லவி டாக்டரும் ஆவார். தற்போது அவர் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறர்.
இந்த நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் சாய்பல்லவி. சிகப்பு நிற புடவை கட்டி தலை நிறைய மல்லிகை பூ அணிந்து அவர் கோவிலை வலம் வந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். “பிரகதீஸ்வரரின் அருள் உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்கட்டும்” என்று நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.