சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சுதீஷ்சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பஹத்பாசில் நடித்த 'மாரீசன்' படம், கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தின் கருவும், வடிவேலுவின் நடிப்பும் பாராட்டப்பட்டது. விமர்சன ரீதியாக படத்துக்கு நல்ல வரவேற்பு, ஆனால், தியேட்டரில் படத்துக்கு ஏனோ வரவேற்பு இல்லை. படம் வெளியான முதல் 3 நாட்கள் ஓகே ரகம். ஒரு சில இடங்களில் ரசிகர்கள் வராததால் தியேட்டர் ஷோ கேன்சல் ஆனது. திங்கள், செவ்வாய் இன்னும் நிலைமை மோசமாக, பல இடங்களில் மாரீசன் ஷோ ரத்தானது. இந்த படத்துடன் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இதுவரை அந்த படம் 30 கோடி வரை வசூலித்ததாக தகவல். ஆனால், மாரீசன் படம் இதுவரை 5 கோடியை கூட தாண்டவில்லை.
அதேசமயம், தலைவன் தலைவி படத்தில் வசூலும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவான வசூலையே ஈட்டி இருக்கிறது. இந்த படங்களுடன் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா' படத்துக்கு தமிழகத்தில் பெரிய வசூல் இல்லை. ஆனால் தெலுங்கு, இந்தியில் அந்த படம் 25 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. இத்தனைக்கும் அந்த படம் அனிமேஷன் படம். வடிவேலு படத்துக்கு என்னாச்சு என்று விசாரித்தால், வடிவேலுவை காமெடி ஹீரோவாகவே மக்கள் பார்க்கிறார்கள். அவர் குணச்சித்திர ரோலில் நடித்த மாமன்னனை ஏற்கவில்லை. அதேபோல், மாரீசனையும் விரும்பவில்லை. தவிர, மாரீசன் படத்துக்கு சரியான பப்ளிசிட்டி இல்லை. படத்துக்கு பாடல் வெளியீட்டுவிழா, ப்ரி ரிலீஸ் ஈவன்ட் நடத்தப்படவில்லை. வடிவேலும் ஒன்றிரன்டு பேட்டி கொடுத்துவிட்டு ஒதுங்கிவிட்டார். தலைவன் தலைவி படக்குழுவினர் நன்றாக பப்ளிசிட்டி செய்தனர் என்கிறார்கள்.