இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், வெந்து தணிந்தது காடு படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். முதல் பாகம் அடுத்த மாதம் திரைக்கு வரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தில் சிம்பு ஒரு சாதாரண இளைஞராக இருந்து கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். இரண்டாம் பாகம் அந்த கேங்ஸ்டர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சொல்லும் கதையில் உருவாகிறது என்று ஒரு புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன். அதோடு தற்போது பத்து தல படத்திலும் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.