டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் கவுதம் மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், வெந்து தணிந்தது காடு படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். முதல் பாகம் அடுத்த மாதம் திரைக்கு வரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பாகத்தில் சிம்பு ஒரு சாதாரண இளைஞராக இருந்து கேங்ஸ்டராக உருவெடுக்கிறார். இரண்டாம் பாகம் அந்த கேங்ஸ்டர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை சொல்லும் கதையில் உருவாகிறது என்று ஒரு புதிய அப்டேட்டை கொடுத்திருக்கிறார் கவுதம் மேனன். அதோடு தற்போது பத்து தல படத்திலும் சிம்பு கேங்ஸ்டர் வேடத்தில் தான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




