இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம். தனது டைமிங் காமெடி மூலம் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்த சந்தானம், ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அதோடு காமெடியனாக நடிப்பதை முழுமையாக தவிர்த்து வந்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு போன்ற சில படங்கள் ஓரளவு வெற்றி பெற்றபோதும் சமீபத்திய படங்கள் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சந்தானம். அப்போது ஆர்யா நடிக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காமெடியாக நடிக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வருமாறு என்னிடத்தில் கேட்டுக் கொண்ட ஆர்யா, என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என்று நான் கூறினேன். அதற்கு ஆர்யா, இங்கேயும் வந்து சும்மா இருந்துட்டு போ என்று சொல்லிதான் என்னை அழைத்தார் என்றும் காமெடியாக பேசினார். அந்த வகையில் மீண்டும் சந்தானம் காமெடியனாக நடிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சந்தானமே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.