டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் சந்தானம். தனது டைமிங் காமெடி மூலம் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்த சந்தானம், ஒரு கட்டத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். அதோடு காமெடியனாக நடிப்பதை முழுமையாக தவிர்த்து வந்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், தில்லுக்கு துட்டு போன்ற சில படங்கள் ஓரளவு வெற்றி பெற்றபோதும் சமீபத்திய படங்கள் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சந்தானம். அப்போது ஆர்யா நடிக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் காமெடியாக நடிக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வருமாறு என்னிடத்தில் கேட்டுக் கொண்ட ஆர்யா, என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு வீட்டில் சும்மாதான் இருக்கிறேன் என்று நான் கூறினேன். அதற்கு ஆர்யா, இங்கேயும் வந்து சும்மா இருந்துட்டு போ என்று சொல்லிதான் என்னை அழைத்தார் என்றும் காமெடியாக பேசினார். அந்த வகையில் மீண்டும் சந்தானம் காமெடியனாக நடிக்கப் போவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சந்தானமே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.




