படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கடமையை செய். வருகிற 12ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் கூறியதாவது: பல போராட்டங்களுக்கு பிறகு இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகிறது. முதன்முதலில் இந்த படக்கதையை என்னிடம் கூற வந்த போது என்னால் இந்த பாத்திரத்தை பண்ண முடியுமா? என பயந்தேன். ஆனால் செட்டில் இயக்குனர் என்னை சிறப்பாக நடிக்க வைத்தார்.
எனக்கு ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற அடையாளம் இருக்கிறது, அது இந்தப்படம் மூலம் மாறும். இந்த படத்தில் நான் பெரிய உழைப்பை கொடுத்துள்ளேன். இனிமேல் எனக்கு நிறைய நல்ல படங்கள் வருமென நம்புகிறேன். ஒளிப்பதிவாளர் உடைய ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கும். இந்த படம் ஒரு பேமிலி எண்டர்டெயினர் ஆக இருக்கும். என்றார்.