இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ராஜ்யசபா எம்.பி.,யாக பொறுப்பேற்கவுள்ள இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1400 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் இவர் நியமன எம்பி.,யாக அறிவிக்கப்பட்டார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இளையராஜா அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு கச்சேரி நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை 19) காலை சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரை வரவேற்க பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன், சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பா.ஜ., மாவட்ட செயலாளர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், மற்றும் இசை சங்கத்தினர் திரளாக வந்திருந்னர்.
இளையராஜாவுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எம்.பி., பதவி மற்றும் பிரதமர் மோடி குறித்த அவரின் பாராட்டு ஆகியவை சர்ச்சைக்குள்ளானது. இதனால் பாதுகாப்பு கூடுதலாக வழங்க போலீசார் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.