சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
ராஜ்யசபா எம்.பி.,யாக பொறுப்பேற்கவுள்ள இளையராஜாவுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 1400 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. சமீபத்தில் இவர் நியமன எம்பி.,யாக அறிவிக்கப்பட்டார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இளையராஜா அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டு கச்சேரி நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று(ஜூலை 19) காலை சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவரை வரவேற்க பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன், சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பா.ஜ., மாவட்ட செயலாளர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், மற்றும் இசை சங்கத்தினர் திரளாக வந்திருந்னர்.
இளையராஜாவுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எம்.பி., பதவி மற்றும் பிரதமர் மோடி குறித்த அவரின் பாராட்டு ஆகியவை சர்ச்சைக்குள்ளானது. இதனால் பாதுகாப்பு கூடுதலாக வழங்க போலீசார் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.