சம்பளத்தை உயர்த்த மாட்டேன் : சசிகுமார் உறுதி | அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி : பார்த்திபன் கலகலப்பு | ராம் சரணுக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக வழங்கிய இங்கிலாந்து ரசிகர்கள் | சந்தான பட சர்ச்சை பாடல்: என்ன பிரச்னை? பாட்டில் அப்படி என்ன இருக்கிறது? | அடுத்தடுத்து இரண்டு 200 கோடி படங்கள் : கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | கோவிந்தா பாடல்... சந்தானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : ரூ.100 கோடி நஷ்ட கேட்டு நோட்டீஸ் | கேரளாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு : ரஜினியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் | மகன் படத்தில் பாடுவாரா விஜய்? | திரையுலகில் 50வது ஆண்டு: பாரதரத்னா விருது பெறுவாரா இளையராஜா? | இந்தியிலும் கலக்கும் ரெஜினா |
இசையமைப்பாளர் இளையராஜா முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படம், மே 14, 1976ல் வெளியானது. அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா. இதுவரை ஆயிரத்து 400க்கும் அதிகமான படங்களில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து விட்டார்.
ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளை பார்த்துவிட்டார். 5 தேசியவிருது, ஏகப்பட்ட மாநில, மற்ற விருதுகள், பத்ம விபூஷண் விருது வரை வாங்கிவிட்டார். 81 வயதிலும் கச்சேரிகள், சிம்போனி என பிஸியாக இருக்கிறார். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருக்கிறார். இதற்கெல்லாம் மணிமகுடமாக இந்த 50வது ஆண்டில் அவருக்கு பாரதரத்னா கிடைக்க வேண்டும், வாழும் காலத்திலேயே அவர் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.
இளையராஜாவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக சில மாதங்களாக தகவல்கள் கசிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ராஜாஜி, சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன், காமராஜர், அப்துல்கலாம், எம்ஜிஆர், எம்.எஸ் சுப்புலட்சுமி, சி.சுப்ரமணியம் ஆகியோர் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருது பெற்றவர்கள்.