விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ஸ்டூடியோவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் வாழ்த்துடன் கேக் வெட்டி அவர் கொண்டாடினார். பின்னர் அளித்த பேட்டியில் ''துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி. இன்றைய பிறந்தநாளில் இனிப்பான செய்தியை சொல்லப்போகிறேன். லண்டனில் நான் சிம்பொனி செய்தேன். அதை இங்கே இருப்பவர்கள் பலரால் கேட்க முடியவில்லை. அதனால், அதே ராயல் பில்ஹார்மோனிக் குழுவை இங்கே வரவழைத்து, ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் சிம்பொனி இசைக்க உள்ளேன். தமிழக முதல்வரும் இதற்கு வரவேற்பு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் பாடல்களை எல்லா சூழ்நிலையிலும், எந்த உணர்விலும் கேட்கலாம். என் பாடல்கள் டாஸ்மாக் சரக்கு இல்லாமலே போதை ஏற்றுபவை'' என்றார். அவரை சந்தித்து வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும். முன்பே இதை வலியுறுத்தி இருக்கிறோம். விரைவில் அதை மத்திய அரசு செய்யும் என நம்புகிறேன்' என்றார். இளையராஜா பாடல்களால் வளர்ந்த ராமராஜனும் நேரில் வந்து இளையராஜாவை வாழ்த்தினார்.