பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ஸ்டூடியோவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் வாழ்த்துடன் கேக் வெட்டி அவர் கொண்டாடினார். பின்னர் அளித்த பேட்டியில் ''துணை ஜனாதிபதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி. இன்றைய பிறந்தநாளில் இனிப்பான செய்தியை சொல்லப்போகிறேன். லண்டனில் நான் சிம்பொனி செய்தேன். அதை இங்கே இருப்பவர்கள் பலரால் கேட்க முடியவில்லை. அதனால், அதே ராயல் பில்ஹார்மோனிக் குழுவை இங்கே வரவழைத்து, ஆகஸ்ட் 2ம் தேதி மீண்டும் சிம்பொனி இசைக்க உள்ளேன். தமிழக முதல்வரும் இதற்கு வரவேற்பு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் பாடல்களை எல்லா சூழ்நிலையிலும், எந்த உணர்விலும் கேட்கலாம். என் பாடல்கள் டாஸ்மாக் சரக்கு இல்லாமலே போதை ஏற்றுபவை'' என்றார். அவரை சந்தித்து வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும். முன்பே இதை வலியுறுத்தி இருக்கிறோம். விரைவில் அதை மத்திய அரசு செய்யும் என நம்புகிறேன்' என்றார். இளையராஜா பாடல்களால் வளர்ந்த ராமராஜனும் நேரில் வந்து இளையராஜாவை வாழ்த்தினார்.