புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் | நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தது ஏன் ? மனம் திறந்த மோகன்லால் | செல்வராகவன் நடிக்கும் ‛மனிதன் தெய்வமாகலாம்' | கடைசி படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக்கை இணைக்க சொன்ன நடிகர் | மார்க்கெட்டை பிடிக்க உத்தரவாதம் கொடுக்கும் நடிகை | 27 ஆண்டு போராட்டம் இப்போ சினிமா ஹீரோ |
தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா நடிக்கும் 'குபேரா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அந்த விழாவில் 2018ல் இருந்து 'வட சென்னை பார்ட் 2' எப்ப என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று பேச ஆரம்பித்த தனுஷ், ஒரு கட்டத்தில் எமோஷனல் ஆனார்.
''என்னை பற்றி அதிக நெகட்டிவிட்டி செய்திகள் பரப்பப்படுகின்றன. அதிக வதந்தி வருகிறது. என் படங்கள் ரிலீஸ் ஆகும்பபோது இதை காம்பெய்ன் மாதிரி செய்கிறார்கள். ஆனால், என்னை வழி நடத்த என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை என் வழித்துணை என்பேன். அவர்கள் தீ பந்தம் மாதிரி என்னை வழி நடத்துகிறார்கள். நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க. அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை. இப்ப, ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க முடியாது. தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க. எண்ணம்போல்தான் வாழ்க்கை'' என்றார்.
தம்பிகளா என்று தனுஷ் சொன்னது யாரை? என்பதே இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.