லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மலையாள நடிகர்களில் தனது வித்தியாசமான கதை தேர்வால் மலையாள திரையுலகை மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகிலும் சேர்த்து ஒருவித ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்திய உள்ளவர் நடிகர் பஹத் பாசில். அதன் விளைவுதான் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் அவர் நடித்த புஷ்பா மற்றும் விக்ரம் படங்கள் ஹிட்டானதுடன் தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகராகவும் மாறியுள்ளார் பஹத் பாசில்.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் நடித்துள்ள மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் ஜூலை-22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சஜிமோன் பிரபாகரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். முப்பது வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படம் இது. இந்தப்படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள சோளப்பெண்ணே என்கிற லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா கூறும்போது, “பஹத் பாசில், நீங்கள் எப்போதுமே உங்களுடைய கதைகளால் என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள்.. மலையான் குஞ்சு படத்தின் ட்ரெய்லரை பார்த்து வியந்தேன்.. உண்மையிலேயே வித்தியாசமான ஒரு முயற்சி” என்று பாராட்டி உள்ளதோடு இந்த படத்தை தயாரித்த இயக்குனர் பாசிலுக்கு தன் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.