இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு கூட்டணியில் 2003ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வின்னர்'. இந்த படத்தின் காமெடி பெரிதும் பேசப்பட்டது. இப்போதும் டிவியில் இந்த படத்தின் காமெடியோ அல்லது படமே ஒளிப்பரப்பானாலும் ரசிகர்கள் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கைப்புள்ளயாக அசத்தியிருந்தார் வடிவேலு. இந்நிலையில் ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் வேளையில் வின்னர் 2 படமும் உருவாக உள்ளது. இந்த தகவலை நடிகர் பிரசாந்தே வெளியிட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழிபட்ட நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛எனது ‛அந்தகன்' படம் விரைவில் வெளியாகிறது. அடுத்து ‛வின்னர் 2' உருவாகிறது. முதல்பாகத்தை விட இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாய் இருக்கும்'' என்றார்.