அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் புதுமண ஜோடி தாய்லாந்தில் தங்களது ஹனிமூனைக் கொண்டாடியது. அங்கிருந்து அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
நேற்றுடன் அவர்களது ஹனிமூனை முடித்துவிட்டு, அதற்காக நன்றிக் குறிப்பையும் அவர் பதிவிட்டுள்ளார். ஹனிமூனை ஏற்பாடு செய்து தந்த டிராவல் ஏஜென்சி, தங்கியிருந்த ஹோட்டல், அந்த ஹோட்டலின் செப் என அனைவருக்கும் மனப்பூர்வ நன்றியைத் தெரிவித்துள்ளார் விக்கி. அற்புதமான சூழலுக்காகவும், சிறப்பான உணவுக்காகவும் மீண்டும் ஒரு முறை வருவோம் என மனதாரப் பாராட்டியுள்ளார் விக்கி. வழக்கம் போல மனைவி நயன்தாராவுடனான சில பல புகைப்படங்களும் அந்தப் பதிவில் அடக்கம்.