முதல் நாளில் ரூ.27 கோடி வசூலித்த 'மிராய்' | 'கங்குவா' கதாநாயகி வீட்டில் துப்பாக்கிச் சூடு : இது ‛டிரைலர்' என எச்சரிக்கை | கர்நாடக இசைப்பாடகி எஸ்.ஜே.ஜனனியின் 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு : கலைஞர்கள் பங்கேற்பு | டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா 4 |
சில மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமார் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை ஆதிக் சமீபத்தில் உறுதி செய்தார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.
சில மாதங்களாக இந்த படத்தின் தயாரிப்பில் பல குழப்பங்கள் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. ஆனால், இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் தயாரிக்கிறார். இம்மாத இறுதியில் அஜித் சென்னை திரும்புகிறார். அடுத்த மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கும் என்கிறார்கள். இந்த படத்தில் நடிப்பதற்காக மோகன்லால், ஸ்ரீலீலா ஆகியோரிடம் கால்ஷீட் தேதி வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் மற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.