புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா | கூலி முதல் மீஷா வரை இந்த வார ஓடிடி ரலீஸ்...! | பிளாஷ்பேக் : காமெடியனாக இருந்து வில்லனாக மாறிய கவுண்டமணி | பிளாஷ்பேக் : ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படம் இயக்கிய பெண் இயக்குனர் | தமிழ் சினிமாவில் இன்னொரு உலக அழகி |
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்குகிறார். நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை விஷால் புது உதவி இயக்குநர் குழுவை வைத்து இயக்கினார். ரவி அரசு மற்றும் அவரின் உதவி இயக்குநர்கள் எவரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை என்கிற தகவல்கள் தீயாக பரவியது. இது குறித்து நமக்கு கிடைத்த கூடுதல் தகவலின் படி, ரவி அரசு உதவி இயக்குநர்களுக்கும், படக்குழு ஒருவரிடமும் ஏற்பட்ட மன கசப்பால் ரவி அரசு மற்றும் உதவி இயக்குநர்கள் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியுள்ளனர். அதனால் அந்த ஒரு நாள் படப்பிடிப்பை மட்டும் விஷால் இயக்கியுள்ளார். அதன் பின்னர் ரவி அரசு உடன் விஷால் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக இந்த பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். இப்போது இந்த படப்பிடிப்பை ரவி அரசு இணைந்து இயக்கி வருகிறார் .