படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
விராட பர்வம் படத்தில் நடித்து முடித்துள்ள சாய் பல்லவி அடுத்து, கார்கி, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமென நடித்து வருகிறார். இந்த நிலையில் விராட பர்வம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், ‛‛வன்முறை எனக்கு பிடிக்காது. வன்முறை மூலம் சாதிக்க முடியும் என நம்பவில்லை. முடிந்தவரை யாரையும் காயப்படுதாமல் இருக்க வேண்டும். சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அதை மத மோதல்களாக பார்க்கிறோம். சமீபத்தில் மாடுகளை கொன்று ஒரு வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டது, அதன் டிரைவர் முஸ்லிம் என்பதற்காக அவரை அடித்து, கொன்று ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பினர். இந்த இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இடது சாரி அல்லது வலதுசாரி என யாராக இருந்தாலும் பிறரை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். மதங்களைக் கடந்து மனிதர்களாக இருக்க வேண்டும்'' என்றார்.
சாய் பல்லவியின் இந்த கருத்து வைரலாகி வருதுடன் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.