மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக, 'பீ ஹேப்பி' என்ற பெயரில் வன பூங்கா கோவையில் அமைகிறது.மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக, கோவை பச்சாபாளையத்தில், 'சிறுதுளி' அமைப்பு சார்பில், எஸ்.பி.பி., வனம் உருவாக்கப்பட்டது. இந்த வனத்தை ஏற்கனவே, நடிகர் விவேக் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது நினைவாக 'பீ ஹேப்பி' என்ற பெயரில், ஒரு ஏக்கரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க, 'சிறுதுளி' அமைப்பு திட்டமிட்டுள்ளது. 'சிறுதுளி' அமைப்பின் 19ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நடிகர் விவேக் நினைவாக அமைக்கப்பட உள்ள இந்த வனத்துக்கு, பச்சாபாளையத்தில் நேற்று முன்தினம் பூமி பூஜை நடந்தது.'சிறுதுளி' அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: நடிகர் விவேக் இயற்கையை பெரிதும் நேசித்தவர். ஏராளமான மரங்களை வளர்த்து, மக்களிடம் சுற்றுச்சூழல் ஆர்வத்தை விதைத்தவர்.
சிறுதுளி அமைப்புடன் இணைந்து, பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார். அவரின் நினைவாக ஒரு ஏக்கரில், 'பி ஹேப்பி' வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது. வெகுவிரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு, அவர்கள் கூறினர். நடிகர் விவேக் பேசிய சினிமா வசனங்களில், 'பீ ஹேப்பி' என்ற வார்த்தையும் மிகவும் பிரபலம். இதை வைத்து 'மீம்ஸ்'களும் அவ்வப்போது வெளிவரும். அந்த வார்த்தையை மையப்படுத்தியே வனம் அமைய உள்ளது.