அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
தமிழ் திரையுலகை கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக தனது காந்தக் குரலால் மகிழ்வித்து வந்தவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம். கடந்த 2020ல் கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகிற்கு மட்டுமல்லாமல் அவரது இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் பேரிழப்பாகவும் அமைந்தது. இந்த நிலையில் அவரது 75வது வருட பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக எஸ்பிபி 75 என்கிற சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினார் எஸ்பிபி சரண். நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக ஏ.ஆர் ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையேறி எஸ்பிபி.,யின் ஹிட் பாடலான முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை இடையிலிருந்து பாட ஆரம்பித்தார். சில வரிகள் பாடியதும் அதற்கடுத்த வரிகள் அவருக்கு நினைவில் வராமல் சற்று தடுமாறினார். உடனே அருகிலிருந்த எஸ்பிபி சரண் அந்த பாடலை அவர் விட்ட இடத்திலிருந்து சில வரிகள் பாடி கைகொடுக்க அதற்கடுத்த வரிகளை இருவருமே கோரஸாக சேர்ந்து பாட அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.