Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி 75 ; தடுமாறிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கைகொடுத்த எஸ்பிபி சரண்

05 ஜூன், 2022 - 12:51 IST
எழுத்தின் அளவு:
SPB-75;-SPB-Charan-helps-AR-Rahman

தமிழ் திரையுலகை கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக தனது காந்தக் குரலால் மகிழ்வித்து வந்தவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம். கடந்த 2020ல் கொரோனா தொற்று காரணமாக அவர் உயிரிழந்தது திரையுலகிற்கு மட்டுமல்லாமல் அவரது இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாகவும் பேரிழப்பாகவும் அமைந்தது. இந்த நிலையில் அவரது 75வது வருட பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக எஸ்பிபி 75 என்கிற சிறப்பு இன்னிசை நிகழ்ச்சியை நடத்தினார் எஸ்பிபி சரண். நிகழ்ச்சியில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக ஏ.ஆர் ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையேறி எஸ்பிபி.,யின் ஹிட் பாடலான முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை இடையிலிருந்து பாட ஆரம்பித்தார். சில வரிகள் பாடியதும் அதற்கடுத்த வரிகள் அவருக்கு நினைவில் வராமல் சற்று தடுமாறினார். உடனே அருகிலிருந்த எஸ்பிபி சரண் அந்த பாடலை அவர் விட்ட இடத்திலிருந்து சில வரிகள் பாடி கைகொடுக்க அதற்கடுத்த வரிகளை இருவருமே கோரஸாக சேர்ந்து பாட அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன்-2வுக்கு தயாரா இருங்க; ஒளிப்பதிவாளருக்கு கமல் மெசேஜ்இந்தியன்-2வுக்கு தயாரா இருங்க; ... திருமணம் மூலமும் கல்லாக்கட்டும் விக்னேஷ்சிவன் - நயன்தாரா ஜோடி திருமணம் மூலமும் கல்லாக்கட்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)