'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது |
வர்மா, மகான் படங்களைத் தொடர்ந்து தற்போது மாரி செல்வராஜ் இயக்கி உள்ள பைசன் படத்தில் நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.
தக்லைப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதே அடுத்து இளவட்ட நடிகர்களை வைத்து காதல் கதையில் ஒரு படம் இயக்கப்போவதாக கூறியிருந்த மணிரத்னம், தற்போது அந்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் முதல் நடைபெறுகிறது.