இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். 80களில் அவரது இயக்கத்தில் வர ஆரம்பித்த படங்கள் புதிய அலையை உருவாக்கின. அந்த அலையில் சிக்கிய பலர் இப்போது இயக்குனர்களாக இருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
மணிரத்னம் படங்கள் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. தெலுங்கில் அவர் நேரடியாக 'கீதாஞ்சலி' படம் அங்கும் வெற்றி பெற்று தமிழிலும் 'இதயத்தைத் திருடாதே' என டப்பிங் ஆகி இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. அவர் இயக்கிய ஒரே தெலுங்குப் படம் அதுதான்.
ஆனாலும், இன்றைய தெலுங்கு இயக்குனர்களையும் அவர் கவர்ந்துள்ளார் என்பது கூடுதல் தகவல். ஷிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் 'குஷி' படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அப்பாடலில் மணிரத்னம் இயக்கத்தில் வந்த படங்களின் பெயர்களைப் பாடலில் சேர்த்திருக்கிறார்கள்.
'நா ரோஜா நுவ்வே' என்ற அப்பாடலில், “தில் சே, அஞ்சலி, கீதாஞ்சலி, கடலி, மௌன ராகம், அம்ருதா, கர்ஷனா, சகி, தளபதி, செலியா, நாயகடு, ஓகே பங்காரம்,” மணிரத்னம் படப் பெயர்களை வைத்தே பாடலை இயக்குனர் சிவ நிர்வானாவே எழுதியிருக்கிறார்.
ஹெஷம் அப்துல் வகாப் இசையமைத்து, அவரே பாடலையும் பாடியுள்ளார். 24 மணி நேரத்தில் இப்பாடல் 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் மீது எந்த அளவிற்கு இயக்குனர் சிவ நிர்வானா அபிமானமாக உள்ளார் என்பதை இப்பாடல் காட்டுகிறது.