புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி, ஆரி, தான்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி.
இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார். மேலும் உதயநிதியிடம் ஒரு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். அவர் கூறியதாவது:
கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதி அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன். அதை மெய்ப்பிக்கும் விதமாகச் சிறப்பாக இருந்தது நெஞ்சுக்கு நீதி. அன்று நான் சொன்னது போல இதுபோன்ற படங்களில் நடித்தால் கலையும் எதிர்கால முற்போக்குக் கருத்துலகமும் கைவிடாது. அது போல வெளிவர முடியாமல் தவிக்கும் கதையம்சம் நிறைந்த சிறுபட்ஜெட் படங்களை வாங்கி வெளியிட்டால் நடிகர்கள், இயக்குநர்கள், புதிய கலைஞர்கள் நன்றியோடு உங்களை என்றும் மறவாது வாழ்த்துவர். இப்பெருமையினைச் சொல்லி மகிழும் தருணத்தை எதிர்நோக்கி... வாழ்த்துகள் என்றார்.