இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா, தற்போது தனது 41வது படத்திலும் அவர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா மீனவராக நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக கோவாவில் நடைபெற உள்ளது.
இப்படத்தில் மீனவராக நடிக்கும் சூர்யா, அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதில் இளமையாக நடிக்கும் சூர்யா, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதல்கட்ட படப்பிடிப்பில் இளைஞராக நடித்து வந்த சூர்யா அடுத்தபடியாக வயதான அப்பா வேடத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.