மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகசைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே பிரிந்தார். பொதுவாக ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகிவிட்டால் அதையே காரணமாக வைத்து அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள். ஆனால், அந்தத் தடைகளை மீறி திருமணத்திற்குப் பின்னும் கதாநாயகியாக நடித்து வந்தார் சமந்தா. திருமணப் பிரிவுக்குப் பிறகும் அவரது இமேஜ் போய்விடும், வாய்ப்புகள் கிடைக்காது என்றார்கள். இருந்தாலும் இப்போதுதான் இன்னும் அதிகமான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார் சமந்தா.
தற்போது 'சாகுந்தலம், யசோதா' என அடுத்தடுத்து இரண்டு பான் இந்தியா படங்கள் சமந்தா நடித்து வரவிருக்கின்றன. விஜய் தேவரகொன்டா ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த இரு தினங்களாக ஒரு பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட கவர்ச்சிப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ஆச்சரியப்படுத்தி வருகிறார் சமந்தா. அந்தப் பத்திரிகையின் பேட்டியிலும் கவர்ச்சியாகவும், ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார் என சொல்லியிருக்கிறார்.
“எனது நிறத்துக்காக எனக்கு நம்பிக்கை வருவதற்கு சில காலங்கள் ஆனது. ஆனால், இப்போது கவர்ச்சியான கதாபாத்திரம் என்றாலும், ஆக்ஷன் கதாபாத்திரம் என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க நிறைய நம்பிக்கை வந்துள்ளது. எனது கடந்த காலங்களில் அப்படி நடிக்க எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. நிறைய படங்களில் நடித்த பிறகு எனக்கு நம்பிக்கை அதிகமானது என்று சொல்லலாம். வயதும் அனுபவமும் அதற்கு ஒரு காரணம்,” எனத் தெரிவித்துள்ளார்.