புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
நடிகை சமந்தா சில ஆண்டுகளாகவே தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். அடிக்கடி ட்ரிட்மென்ட் போகிறார், ஓய்வெடுக்கிறார். அந்த நோய் பாதிப்புக்குபின் ஆளே மாறிவிட்டார். தவிர, திருமணம், விவகாரத்துக்குபின் அவருக்கான கிரேஸ் குறைந்துவிட்டது. இப்போது முன்னணி ஹீரோ படங்களில் அவர் ஹீரோயினாக நடிப்பது இல்லை. வெப்சீரிஸ், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில்தான் நடிக்கிறார். அதிலும் தமிழ் பக்கம் வருவதே இல்லை. ஐதரபாத்தில் செட்டில் ஆகிவிட்டவர், அங்கேதான் இருக்கிறார். தமிழில் அவர் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்நிலையில், வருங்காலத்தில் நான் படத்தயாரிப்பு, என் பிஸினசில் முழு கவனம் செலுத்தப்போகிறேன். நடிப்பதை நிறுத்தலாம் என்று பேசி இருக்கிறார். தமிழில் அவர் விஜய்சேதுபதி ஜோடியாக ‛சூப்பர் டீலக்ஸ்'ல் நடித்தார். பின்னர் ‛காத்துவாக்குல 2 காதல்' படத்தில் நடித்தார். இந்த படங்கள் வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்து அவர் நடித்த ‛ஓ பேபி, யசோதா, சாகுந்தலம், குஷி' படங்கள் தமிழில் டப்பிங் ஆனது. அந்த படங்களும் ஹிட் ஆகவில்லை. ஆகவே, தமிழில் மார்க்கெட் போனநிலையில், தெலுங்கிலும் மார்க்கெட் குறைந்ததால் நடிப்பதை நிறுத்துவது என முடிவெடுத்து இருக்கிறாராம்.