6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி |
தெலுங்கு திரையுலகில் இருந்து புஷ்பா, அடுத்து ஆர்ஆர்ஆர், இந்தப்பக்கம் கன்னடத்திலிருந்து கேஜிஎப்-2 என பெரிய படங்கள் எல்லாம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியை பெற்றன. இந்த சூழலில்தான் மிக பெரிய பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடிப்பில் உருவான ஆச்சார்யா திரைப்படமும் அந்த படங்களுக்கான வரவேற்பையும் வசூலையும் பெற்றுவிடலாம் என்கிற கணக்கில் சமீபத்தில் ரிலீசானது. ஆனால் படம் வெளியான முதல் நாளே ரிசல்ட் நெகட்டிவாக வர ஆரம்பித்ததால் தோல்விப்பட்டியலில் இடம்பிடித்து விட்டது ஆச்சார்யா.
கொரட்டலா சிவா இயக்கிய இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தான் தயாரித்து இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யுமாறு வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சிரஞ்சீவி இடம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர். இதில் ராஜகோபால் பஜாஜ் என்கிற விநியோகஸ்தர் மற்றவர்களுக்கு முன்னதாக முந்திக்கொண்டு சிரஞ்சீவிக்கு ஒரு கடிதமே எழுதிவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முழு தொகையையும் கொடுத்து வாங்கியதாகவும், தற்போது கிட்டத்தட்ட 75% இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த இழப்பை ஈடு செய்யுமாறு சிரஞ்சீவியிடம் கோரிக்கையும் வைத்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள இந்த கடிதம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.