பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெலுங்கு திரையுலகில் இருந்து புஷ்பா, அடுத்து ஆர்ஆர்ஆர், இந்தப்பக்கம் கன்னடத்திலிருந்து கேஜிஎப்-2 என பெரிய படங்கள் எல்லாம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியை பெற்றன. இந்த சூழலில்தான் மிக பெரிய பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடிப்பில் உருவான ஆச்சார்யா திரைப்படமும் அந்த படங்களுக்கான வரவேற்பையும் வசூலையும் பெற்றுவிடலாம் என்கிற கணக்கில் சமீபத்தில் ரிலீசானது. ஆனால் படம் வெளியான முதல் நாளே ரிசல்ட் நெகட்டிவாக வர ஆரம்பித்ததால் தோல்விப்பட்டியலில் இடம்பிடித்து விட்டது ஆச்சார்யா.
கொரட்டலா சிவா இயக்கிய இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தான் தயாரித்து இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யுமாறு வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சிரஞ்சீவி இடம் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர். இதில் ராஜகோபால் பஜாஜ் என்கிற விநியோகஸ்தர் மற்றவர்களுக்கு முன்னதாக முந்திக்கொண்டு சிரஞ்சீவிக்கு ஒரு கடிதமே எழுதிவிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முழு தொகையையும் கொடுத்து வாங்கியதாகவும், தற்போது கிட்டத்தட்ட 75% இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த இழப்பை ஈடு செய்யுமாறு சிரஞ்சீவியிடம் கோரிக்கையும் வைத்துள்ளார். சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ள இந்த கடிதம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.