ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ள பிரமாண்ட படம் 'ஆர்ஆர்ஆர்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்குமே ரசிகர்கள் அதிகம் என்பதால், அவர்களால் தியேட்டர்களில் திரை சேதம் ஏற்படாமல் இருக்க ஆணி படுக்கை, முள் கம்பி தடுப்புகள் போன்றவற்றை ஆந்திர திரையரங்க நிர்வாகங்கள் ஏற்படுத்தியுள்ளனர் .
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தியேட்டரில் தொழில்நுட்ப கோளாறு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் வாக்குவாதம் செய்து, தியேட்டரில் இருந்த கண்ணாடிகளை நொறுக்கி சேதப்படுத்தினர் .மேலும் திரைமுன் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியையும் தகர்த்தனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.