பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

தென்னிந்திய சினிமாவில் கடந்த வருடம் ஏற்பட்ட திருமணப் பிரிவுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட பிரிவாக சமந்தா, நாகசைதன்யா பிரிவு இருந்தது. சில பல வருடங்களாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள் அடுத்த சில வருடங்களிலேயே பிரிந்து போனார்கள்.
நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் சமந்தா. தற்போது இன்ஸ்டாவில் நாக சைதன்யாவை 'அன்பாலோ' செய்துவிட்டார் சமந்தா. ஆனாலும், நான்சைதன்யா சமந்தாவை தொடர்ந்து 'பாலோ' செய்து கொண்டு தான் இருக்கிறார்.
சமந்தா, நாகசைதன்யா பிரிவுக்குப் பிறகு இந்த ஆண்டு நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு பரபரப்பாகப் பேசப்பட்டது. நேற்று தன்னுடைய டுவிட்டர் தளத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்று இருந்த பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார் ஐஸ்வர்யா.
திருமண வாழ்க்கை முறிவுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வதும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.




