செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கன்னட மொழி பேசப்படும் கர்நாடகாவில் இப்படத்தை கன்னடத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதை விட தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கன்னடப் பதிப்பைப் பார்ப்பதற்கு இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் பதிப்பை பார்ப்பதற்கு மட்டுமே முன்பதிவு நடந்து வருகிறது.
இதனால், ஆத்திரமடைந்துள்ள கன்னட ரசிகர்கள் 'ஆர்ஆர்ஆர்' குழுவினரைக் கண்டித்தும், ராஜமவுலியைக் கண்டித்தும் டுவிட்டர் தளத்தில், “#BoycottRRRinKarnataka ” என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்து வருகின்றனர்.