பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இயக்குனர் சுந்தர்.சி சினிமா துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், தற்போதும் அவரது படங்களுக்கு என தனி ரசிகர் வட்டமும், வரவேற்பும் இருக்கிறது. காலங்கள் மாற மாற அதற்கேற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவையில் புதுப்புது பணிகளை கையாளுவது சுந்தர்.சியின் உத்திகளில் ஒன்று. அதேபோல சுந்தர்.சியின் படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக நகைச்சுவை நடிகர்களின் கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும்..
அந்தந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருக்கும் நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து அவரது படங்களில் இடம் பெறுவார்கள் அந்த வகையில் அவரது ஆரம்ப கால படங்களில் கவுண்டமணி தொடர்ந்து இடம்பெற்று வந்தார், அவருக்குப்பின் வடிவேலு.. வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கிய நிலையில் அவரை தொடர்ந்து சந்தானத்துடன் கூட்டணி அமைத்தார்.
சந்தானம் ஹீரோவான உடன் சூரி, சூரியை தொடர்ந்து யோகிபாபு.. தற்போது யோகிபாபு பிஸியாக உள்ள நிலையில் புதிதாக காமெடியில் வரவேற்பை பெற்று வரும் நடிகர் ரெடின் கிங்ஸ்லீ என காமெடியை மட்டுமல்லாது காமெடி நடிகர்களையும் தனது படங்களில் அப்டேட் செய்து வருகிறார் சுந்தர்.சி. தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கூட்டணியில் அவர் இயக்கி வரும் படத்தில் ரெடின் கிங்ஸ்லீ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வெளியானால் இவருக்கு இன்னும் வரவேற்பு அதிகரிக்கும் என்பது நிச்சயம் என்கிறார்கள் படக்குழுவினர்..