பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படம், இதுதவிர சிறுத்தை சிவாவுடன் என அடுத்தடுத்து தனது பட வரிசையை தயார் நிலையில் வைத்துள்ளார்.. அதேசமயம் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற சூர்யா, அங்கே தன்னுடைய புதிய பட அறிவிப்பு குறித்து ஒரு தகவலை வெளிப்படையாகவே கூறினார்.
அதாவது மம்முட்டியை வைத்து பல வருடங்களுக்கு முன் பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் அமல் நீரத். தற்போது மம்முட்டியை வைத்து மீண்டும் பீஷ்ம பருவம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தான் கலந்துகொண்ட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஏற்கனவே ஒரு கதை கூறியதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறியுள்ளார். எண்பதுகளில் மம்முட்டி நடித்த மிருகயா என்கிற படத்தை தமிழில் சூர்யாவை வைத்து ரீமேக் செய்யலாம் என சில வருடங்களுக்கு முன்பே அமல் நீரத் முயற்சித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.