பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூரு விமானநிலையத்தில் விஜய் சேதுபதியை சைதாப்பேட்டையை சேர்ந்த மகாகாந்தி என்ற துணை நடிகர் தாக்க முயற்சித்தார். தன்னை விஜய்சேதுபதியின் ஆட்கள் தாக்கியதால் திருப்பி தாக்கியதாக அவர் தெரிவித்தார்.
அதன்பிறகு மகாகாந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராத விதமாக சந்தித்தபோது, அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசினர்.
ஆனால், மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில், அவதூறு பரப்பினர். எனவே, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 4ம் தேதி விஜய்சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விஜய்சேதுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக சம்பவம் நடந்த பெங்களூரில்தான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், விஜய் சேதுபதிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு, இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது.