துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தெலுங்கில் ஏக் மினி கதா, ஏக் மாயா பிரேமித்தோ, இந்தியில் தட்கல் படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். காவ்யா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதைப்பார்த்த அந்த பகுதியை மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து நடிகை காவ்யா தாபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. போலீசின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் விசாரணை நடத்திய பெண் போலீசின் சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் காவ்யா தாபரை கைது செய்தனர்.
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, பணியில் இருந்த போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்டது என பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.