ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வராகவும் இருந்தவர் மறைந்த என்டிஆர் என்கிற என்டி ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கி ஆந்திராவில் முதல்வராகப் பதவி வகித்தவர். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மருமகன் அந்தக் கட்சியின் தலைவராக இருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு இரண்டு முறை முதல்வராகப் பதவி வகித்த போதும் அவரது மாமனார் என்டிஆர் பெயரில் எந்த மாவட்டத்திற்கும் பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று ஆந்திராவில் உருவாக உள்ள 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே 13 புதிய மாவட்டங்கள் உள்ள நிலையில் புதிதாக சேர உள்ள 13 மாவட்டங்களால் மொத்தம் 26 மாவட்டங்கள் ஆந்திராவில் வர உள்ளன.
அதில் கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டத்தை உருவாக்க உள்ளனர். அதன் தலைநகராக விஜயவாடா நகரம் இருக்கும். கிருஷ்ணா மாவட்டத்தின் தலைவராக மசூலிப்பட்டிணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியையும் ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி திட்டம் வைத்திருந்தார். அதனடிப்படையில் தற்போது புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது.
என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டம் அமைய உள்ளது தெலுங்குத் திரையுலகினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.