'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

சிம்பு நடிப்பில் நீண்ட காலம் கழித்து வெளியாகி நீண்ட காலம் கழித்து அவருக்கு வெற்றியை கொடுத்த படம் மாநாடு. எனவே சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் வேகம் எடுத்துள்ளன. சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கவுதம் கார்த்திக்குடன் பத்து தல படம், அதையடுத்து கொரோனா குமார் படத்தில் கோகுல் இயக்கத்தில் நடிக்கிறார். இது அவரது 49 வது படமாக இருக்கும். இந்நிலையில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, சிம்புவிடம் ஒரு கதை கூறியுள்ளார். சிம்புவுக்கும் கதை பிடித்து விட்டதாம். கொரோனா குமாருக்குப் பிறகு சிம்புவின் 50-வது படமாக சுதா கொங்கரா படம் அமையும் என்கிறார்கள்.




