பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் |
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் ஜனவரி 7ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் மட்டுமின்றி தமிழ் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‛‛ராஜமவுலியின் மகதீரா படம் வெளியான போது தனக்கு சத்யம் திரையரங்கு மிகவும் பிடிக்கும். அதிலுள்ள பெரிய திரையரங்கில் தன்னுடைய படம் வெளியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது அது நடைபெற்றது. அதேபோல் இப்போது ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் உள்ள மூன்று ஏரியாக்களை வாங்கியிருக்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனம், சத்யம் திரையரங்கில் உள்ள 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில் படத்தை வெளியிடுவோம் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தார்.