நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்னையால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தயாராகிறது. சுராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்நிலையில் பாடல் பதிவு தொடர்பாக வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர். அந்த வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் வடிவேலுவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் சுராஜிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது.
இதனால் படம் திட்டமிட்டு தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் படப்பிடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. படப்பிடிப்பு துவங்க இன்னும் மூன்று வாரம் இருப்பதால் அதற்குள் இருவரும் சரியாகி வந்துவிடுவர். அதனால் வரும் 18ம் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.