‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்னையால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். லைகா தயாரிப்பில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தயாராகிறது. சுராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்நிலையில் பாடல் பதிவு தொடர்பாக வடிவேலு, சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர். அந்த வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் வடிவேலுவிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். தொடர்ந்து இயக்குனர் சுராஜிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது.
இதனால் படம் திட்டமிட்டு தொடங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் படப்பிடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. படப்பிடிப்பு துவங்க இன்னும் மூன்று வாரம் இருப்பதால் அதற்குள் இருவரும் சரியாகி வந்துவிடுவர். அதனால் வரும் 18ம் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.